இவ்வருடம் பெப்ரவரி 2ஆம் திகதி முதல் பாத்திமா மகளிர் கல்லூரியில் நடைபெற்று வந்த இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (13.02.2020)அதிபர் தலைமையில் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .
இந்நிகழ்வில் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் , ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், புத்தள நகர பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் , புத்தளம் வலய ஆசிரிய ஆலோசகர்கள், கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் திரு .அனீஸ் ,புத்தளம் வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் திரு மஹ்ரூப் இவர்களுடன் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களும் கலந்து, சிறப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
A special workshop on "leadership" for the new board of prefects 2021, who are selected for the investiture, is being conducted by Major Ali Sabri,35 NCC HQ (National Cadet Scope Head Quarters) at Fathima B M V now.
வடமேல் மாகாணத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் மகளிர் பாடசாலையாகவும் தற்போது மூன்று மும்மொழிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களை கொண்டு இயங்கும் புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் Fathima Balika Maha Vidyalaya- Puttalam. அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை இணைப்புகளின் (Amalgamation) பிரகாரம் போல்ஸ் வீதி அரசினர் ஆண்கள் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், அரசினர் பெண்கள் பாடசாலையாக 1962.02.01 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை அதே இடத்தில் இயங்கி வருகின்றது.
“Cyber Lowata Piyapath” எனும் முழுத் தீவுக்குமான திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளுக்கான இணையத்தளம் தயாரிக்கப்பட்டு வெளியிடும் வைபவம் புத்தளம் வலயத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றான எமது புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நேற்று 19.02.2021 காலை 10 மணிக்கு பாடசாலை அதிபர் திருமதி றஜியா சபியுத்தீன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
A special workshop on "leadership" for the new board of prefects 2021, who are selected for the investiture, is being conducted by Major Ali Sabri,35 NCC HQ (National Cadet Scope Head Quarters) at Fathima B M V now.
வடமேல் மாகாணத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையான இப்பாடசாலையின் அடிப்படை குறைகள் கூட தீர்க்கப்படாத நிலையில் காணப்படுவது கவலைத்தருவதாக தெரிவித்துள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமப்புற மற்றும் பிரதேச குடிநீர் விநியோக திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பாடசாலையின் தேவைகள் தொடர்பில் தமது கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.